மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி, ஆரத்தி எடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்..!

Default Image

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி, ஆரத்தி எடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர்.

கொரோனா தொற்று இரண்டாம் அலை காரணமாக தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரும் வரும்15ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் இரண்டாம் அலை காரணமாக வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வந்தநிலையில், இன்று முதல் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லுாரிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வந்ததால் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவரவேற்பு கொடுக்கப்பட்டது.

மேலும், சில பள்ளிகளில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி, ஆரத்தி எடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர். நுழைவு வாயிலில் மாணவிகள், மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்