ஆசிரியர் தினம் – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து!

ஆசிரியர் தினத்தையொட்டி ஆசியர்கள் அனைவருக்கும் உளம்கனிந்த நல்வாழ்த்துக்கள் தெரிவித்த முதல்வர் மு.க ஸ்டாலின்.
நாடு முழுவதும் நாளை ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆசிரியராக இருந்து இந்தியாவின் முதல் குடிமகனாக உயர்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை செப்டம்பர் 5ம் தேதி இந்தியாவின் ஆசிரியர் தின நாளாக கடைபிடிக்கப்படுகிறது. ஆசிரியர் தினத்தையொட்டி ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தின வாழ்த்துக்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தின வாழ்த்துக்கள் தெரிவித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், கல்விப்பணியை ஈடுபாட்டோடு செய்யும் ஆசிரியர்கள் சமுதாயம் எனும் கடலின் கலங்கரை விளக்கங்கள். ஆசிரியர் பணி என்பது கல்வியை புகட்டுவது மட்டுமன்று மனிதர்களை மனிதர்களாக உருவாக்குவதாகும்.
கைதேர்ந்த சிற்பிகளால் தான் கல்லையும், சிலையும் வேறுபடுத்த இயலும். ஆசிரியரும் அவ்வாறே மாணவர்களின் அறியாமையை கல்வியறிவு என்னும் சுத்தியால் செம்மைப்படுத்தி அறிவுள்ள செய்திகளை புகுத்தி அவர்களை உயர்ந்த மாணவர்களாக உருவாக்குகிறார்கள். அனைத்து ஆசிரிய பெருமக்களையும் ஆசிரியர் தின நன்னாளில் வாழ்த்தி மகிழ்கிறேன் என கூறியுள்ளார்.
“ஆசிரியப் பணி என்பது ஏட்டுக் கல்வியைப் புகட்டுவது மட்டுமன்று. அது, மனிதர்களை – அதுவும் மாமனிதர்களை உருவாக்கும் மகத்தான பணி; புனிதப்பணி” என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். pic.twitter.com/9iKIhnm8xC
— CMOTamilNadu (@CMOTamilnadu) September 4, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
April 8, 2025
மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!
April 8, 2025