மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில் சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் துறையில் ஆசிரியராக ராஜகோபாலன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. ஆசிரியர் ராஜகோபாலன் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசார் பள்ளியில் நேரில் விசாரணை நடத்தினார்.
பள்ளி நிர்வாகம் விசாரணைக்கு முறையாக ஒத்துழைக்கவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆன்லைன் வகுப்பில் மேலாடை இல்லாமல் துண்டு மட்டும் அணிந்துகொண்டு வருவது, ஆபாச வலைத்தள இணைப்புகளை தனது மாணவர்களுடன் பகிர்ந்து கொள்வது போன்ற பல குற்றசாட்டுகள் கூறப்பட்டுள்ளன.
இதைத்தொடர்ந்து, இன்று காவல் துறை ஆசிரியர் ராஜகோபாலனிடம் விசாரணை தொடங்கியது. விசாரணைக்கு முன்பே தன் தொலைபேசியில் இருந்த பல தரவுகளை அளித்ததாகவும், தொலைபேசியில் அளிக்கப்பட்டதை தரவுகளை மீட்க தொழில்நுட்ப வல்லுனர்களிடம் ராஜகோபாலன் தொலைபேசி கொடுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
விசாரணையில் கடந்த 5 ஆண்டுகளாக 11,12-ஆம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதும், மாணவிகளிடம் வாட்ஸ் ஆப் மூலம் சாட் செய்து பாலியல் தொந்தரவு அளித்ததாக ஆசிரியர் ராஜகோபாலன் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில் ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…