டாஸ்மாக் பார் டெண்டர் ஒளிவுமறைவின்றி விடப்பட்டது என அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி.
அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்கு வேண்டியவர்களுக்கு மதுபான பார் டெண்டர் விடுவதாகவும், எனவே இந்த விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிடக் கோரி பார் உரிமையாளர்கள் அமைச்சரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் இதுகுறித்து, சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், போராட்டம் நடத்தியவர்கள் விதிமீறல் தொடர்பாக எந்த மனுவும் கொடுக்கவில்லை. தமிழகத்தில் டாஸ்மாக் பார் நடத்த வசதியுள்ள 1,550 கடைகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும் ஆனால் கொரோனா காலம் என்பதால் கூடுதலாக இரண்டு விதிகள் என 68 விதிகள் அடிப்படையில் பார் டெண்டர் விடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் பார் டெண்டர் ஒளிவுமறைவின்றி விடப்பட்டது. பார் ஏலப்படிவம் ஆன்லைன் மூலமும், நேரிடையாகவும் யார் வேண்டுமானாலும் பெறமுடியும். வீட்டின் முன் ஆர்பாட்டம் நடத்தியவர்கள் இதுவரை என்னை ஒருமுறை கூட சந்திக்கவே இல்லை. போரட்டம் நடத்தியவர்களிடம் கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக எழுதி தரக்கோரியிருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…