கொரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், அத்தியாவசிய கடைகள் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.
இந்த டாஸ்மாக் கடைகளை குறைந்தது ஒரு நாளைக்கு 2 மணி நேரமாவது திறந்துவைக்க வேண்டும் என சென்னை சூளைமேடு சேர்ந்த வசந்த் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கு மனுவில், திடீரென மதுக்கடைகள் மூடப்பட்டதால், மது குடிப்பவர்களுக்கு அது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதயத்துடிப்பு அதிகமாகி சுவாச பிரச்சினைகளை ஏற்படுத்தி, மூளையை பாதிக்கச் செய்வதாக அமைந்து விடும் சூழல் ஏற்பட்டுவிடும்.
மதுபான கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால், மது கடைகளில் மது திருட்டு, கள்ளத்தனமாக மது விற்பனை, கள்ளச்சாராயம் காய்ச்சுதல் போன்ற சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
டாஸ்மாக் மூடப்பட்டதால், மெத்தனால், சானிடைசர், வார்னிஷ் உள்ளிட்டவைகளை குடித்து பலர் மரணித்துள்ளதாகவும், அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பையா அவர்கள் அடங்கிய அமர்வு, அசாம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் மதுக்கடைகளை திறக்க அனுமதித்த உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் வாதிட்டத்தை சுட்டிக்காட்டி, மதுக்கடைகளை திறக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…