டாஸ்மாக்கை 2 மணிநேரமாவது திறந்துவையுங்கள்.! உயர்நீதிமன்றத்தில் வழக்கு.!

Published by
மணிகண்டன்

கொரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், அத்தியாவசிய கடைகள் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.
இந்த டாஸ்மாக் கடைகளை குறைந்தது ஒரு நாளைக்கு 2 மணி நேரமாவது திறந்துவைக்க வேண்டும் என சென்னை சூளைமேடு சேர்ந்த வசந்த் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கு மனுவில், திடீரென மதுக்கடைகள் மூடப்பட்டதால், மது குடிப்பவர்களுக்கு அது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதயத்துடிப்பு அதிகமாகி சுவாச பிரச்சினைகளை ஏற்படுத்தி, மூளையை பாதிக்கச் செய்வதாக அமைந்து விடும் சூழல் ஏற்பட்டுவிடும்.
மதுபான கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால், மது கடைகளில் மது திருட்டு, கள்ளத்தனமாக மது விற்பனை, கள்ளச்சாராயம் காய்ச்சுதல் போன்ற சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
டாஸ்மாக் மூடப்பட்டதால், மெத்தனால், சானிடைசர், வார்னிஷ் உள்ளிட்டவைகளை குடித்து பலர் மரணித்துள்ளதாகவும், அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பையா அவர்கள் அடங்கிய அமர்வு, அசாம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் மதுக்கடைகளை திறக்க அனுமதித்த உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் வாதிட்டத்தை சுட்டிக்காட்டி, மதுக்கடைகளை திறக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

தொடர் தோல்வி..கடும் அப்செட்டில் ருதுராஜ்! ராஜஸ்தான் போட்டிக்கு பின் பேசியது என்ன?

தொடர் தோல்வி..கடும் அப்செட்டில் ருதுராஜ்! ராஜஸ்தான் போட்டிக்கு பின் பேசியது என்ன?

குவஹாத்தி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற…

3 minutes ago

Live : ரமலான் பண்டிகை கொண்டாட்டம் முதல்…மியான்மரில் பயங்கர நிலநடுக்கம் வரை!

சென்னை : தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரமலான் பண்டிகை உற்சாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று பிறை தெரிந்த நிலையில், இன்று ரமலான்…

51 minutes ago

குட் பேட் அக்லி படத்தில் எமோஷனல் இருக்கு! ரசிகர்கள் தலையில் குண்டை தூக்கிப்போட்ட ஆதிக்!

சென்னை : தமிழ் சினிமா மட்டுமின்றி இப்போது இந்திய சினிமா வரை அனைவருடைய கவனம் முழுவதும் அஜித் நடிப்பில் உருவாகி வரும்…

1 hour ago

தோனி இருக்கும்போது சென்னையை கட்டுப்படுத்திட்டாரு! ரியான் பராக்கை புகழ்ந்த சுரேஷ் ரெய்னா!

குவஹாத்தி : நேற்று (மார்ச் 30)நடைபெற்ற ஐபிஎல் 2025 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை…

2 hours ago

மியான்மரில் பயங்கர நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 1,700 உயர்வு!

பாங்காக் : மியான்மரில் மார்ச் 28, 2025 அன்று பிற்பகல் 12:50 மணியளவில் (மியான்மர் நேரம், MMT) 7.7 ரிக்டர்…

2 hours ago

பாஜக அரசு தீட்டும் சதிதிட்டங்கள்…கடுமையாக விமர்சித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தலில் பணியாற்றிய…

3 hours ago