கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததாகக் கூறி, சென்னை செங்குன்றம் அருகே டாஸ்மாக் கடையில் , மேற்பார்வையாளரின் மண்டையை உடைத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சோழவரம் – அம்பேத்கர் நகரில் உள்ள அந்த டாஸ்மாக் கடையில், மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பதாக அவ்வப்போது புகார் எழுந்து வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு மது வாங்க வந்த ஒருவரிடம், டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் ராமன் கூடுதலாகப் பணம் கேட்டதாகவும், அதற்கு அந்த நபர் மறுத்ததால் மேற்பார்வையாளர் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமுற்ற மது வாங்க வந்த நபர், ராமனின் தலையில் பீர் பாட்டிலால் அடித்து தாக்கிவிட்டு தப்பியுள்ளார்.
மண்டை உடைந்த நிலையில் அலறித்துடித்த ராமனை அங்கிருந்தவர்கள் பாடியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சோழவரம் போலீசார், மண்டையை உடைத்த நபரை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…