கூடுதல் விலைக்கு மது விற்பனையா?கடுப்பில் மேற்பார்வையாளரின் மண்டையை உடைத்த குடிமகன் …..

Default Image

கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததாகக் கூறி, சென்னை செங்குன்றம் அருகே டாஸ்மாக் கடையில் , மேற்பார்வையாளரின் மண்டையை உடைத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சோழவரம் – அம்பேத்கர் நகரில் உள்ள அந்த டாஸ்மாக் கடையில், மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பதாக அவ்வப்போது புகார் எழுந்து வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு மது வாங்க வந்த ஒருவரிடம், டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் ராமன் கூடுதலாகப் பணம் கேட்டதாகவும், அதற்கு அந்த நபர் மறுத்ததால் மேற்பார்வையாளர் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமுற்ற மது வாங்க வந்த நபர், ராமனின் தலையில் பீர் பாட்டிலால் அடித்து தாக்கிவிட்டு தப்பியுள்ளார்.

மண்டை உடைந்த நிலையில் அலறித்துடித்த ராமனை அங்கிருந்தவர்கள் பாடியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சோழவரம் போலீசார், மண்டையை உடைத்த நபரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்