தமிழகத்தில் டாஸ்மாக் திறப்பது குறித்து தமிழகஅரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவானது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கையாகஅறிவிக்கப்பட்ட 3ஆம் கட்ட ஊரடங்கில் குறிப்பிட்ட தளர்வுகள் காரணமாக தமிழக அரசானது கடந்த 7 ஆம் தேதி தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டன. அதன் பின்னர் 2 நாட்கள் மதுக்கடைகள் திறந்திருந்தது. டாஸ்மாக் மதுக்கடைகளில் சரியான சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை இதனால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது என கூறி உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் திறப்பிற்குக்கு எதிராக வழக்குகள் போடப்பட்டன.
இந்த வழக்கில் தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் திறக்க தடைவித்தும், ஆன்லைனில் மட்டுமே மது விற்கவும் உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்திருந்தது. உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்ற போது தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் பிழை இருப்பதாக கூறபட்டது. இந்நிலையில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவானது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. இதில் தமிழகத்தில் டாஸ்மாக் குறித்து முக்கிய தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…
சென்னை : நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ள "மெய்யழகன்" படத்தை சி.பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார்.…
அனந்தபூர் : இந்திய உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடர் கடந்த செப்-5 ம் தேதி அன்று தொடங்கியது. 3…