இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நேற்று வரை 909 ஆக இருந்தது. இன்றைய நிலவரபடி இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 979 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உள்ளது.மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கை எடுத்துவருகிறது.
கொரோனா நோய் பரவாமல் இருக்க பிரதமர் மோடி 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிக்கு உதவிட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு டாஸ்மாக் ஊழியர்கள் தங்களின் பங்களிப்புக்காக ஒருநாள் ஊதியத்தை வழங்குகின்றனர் என டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் அறிவித்துள்ளது.இந்த ஒருநாள் ஊதியத்தை மார்ச் மாதம் வழங்கப்படும் ஊதியத்தில் பிடித்து அனுப்பி வைக்க உள்ளனர்.
சென்னை : தமிழக அரசின் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரை வரி விதிக்கப்படும் என…
சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், 'திமுக அரசு மாநில சுயாட்சி கோரிக்கையின் மூலம் பிரிவினைவாத மனப்பான்மையுடன்…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில், இன்று கோடை மழை பெய்து குளிர்ச்சியை…
நெல்லை : திருநெல்வேலி டவுண் பகுதியில் நெல்லையப்பர் கோயில் அருகே உள்ள மிகவும் பிரபலமான அல்வா கடை என்றால் அது…
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ அணி பேட்டிங்கில் பட்டயை கிளப்பி வந்தாலும் பந்துவீச்சில் சுமாராக தான் செயல்பட்டு வருகிறது.…