கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு டாஸ்மாக் ஊழியர்கள் ஒருநாள் ஊதியம் அறிவிப்பு .!

Default Image

இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நேற்று வரை 909 ஆக இருந்தது. இன்றைய  நிலவரபடி இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 979 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை  25 ஆக உள்ளது.மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா  வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கை எடுத்துவருகிறது.

கொரோனா நோய் பரவாமல் இருக்க  பிரதமர் மோடி 21 நாள்களுக்கு  ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.  கொரோனா  வைரஸ் பரவல் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிக்கு உதவிட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

Image

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு டாஸ்மாக் ஊழியர்கள் தங்களின் பங்களிப்புக்காக ஒருநாள் ஊதியத்தை  வழங்குகின்றனர் என டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் அறிவித்துள்ளது.இந்த ஒருநாள் ஊதியத்தை மார்ச் மாதம் வழங்கப்படும் ஊதியத்தில் பிடித்து அனுப்பி வைக்க உள்ளனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்