டாஸ்மாக் வழக்குகள்.! மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்!

டாஸ்மாக் தொடர்பான வழக்குகளை விசாரித்து வந்த இரு அமர்விலிருந்து, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து மத்திய அரசு டாஸ்மாக் இயங்க அனுமதிகொடுத்ததன் மூலம் டெல்லி , கர்நாடகா போன்ற மாநிலங்களில் 40 நாள்களுக்கு பிறகு மதுப்பான கடைகள் திறக்கப்பட்டது.
பின்னர், தமிழகத்திலும் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என்ற தமிழக அரசு அறிவித்தது. அரசின் இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் டாஸ்மாக் மதுக்கடைகளை இயங்க நிபந்தனையின் பேரில் அனுமதி வழங்கியது.
ஆனால், நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் பின்பற்றப்படவில்லை என கூறி உயர்நீதிமன்றத்தில் மனு தொடரப்பட்டது. அந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம் ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மதுபான கடைகளை மூட உத்தரவிட்டது. மேலும், ஆன்லைன் மூலம் மட்டும் மது விற்பனை செய்யலாம் என அறிவித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அதே நேரத்தில் ஆன்லைன் மூலமாகவும் மது விற்பனை நடத்த அனுமதிக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், டாஸ்மாக் தொடர்பான வழக்குகளை விசாரித்து வந்த நீதிபதி வினித் கோத்தாரி, நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா அடங்கிய இரு அமர்விலிருந்து , தலைமை நீதிபதி ஏ.பி சாஹி தலைமையில் நீதிபதிகள் வினித் கோத்தாரி, நீதிபதி பி.என் பிரகாஷ் ஆகியோர் கொண்ட மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. டாஸ்மாக் தொடர்பான வழக்குகளை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் முதல்… நாக்பூரில் 144 தடை உத்தரவு வரை.!
March 18, 2025
தொகுதி மறுசீரமைப்பு : “நாங்கள் தினமும் இதை செய்கிறோம்., ஏற்க மறுகிறாரக்ள்” கனிமொழி கண்டனம்!
March 18, 2025