தமிழகத்தில் த.மா.கா. கட்சியில் மட்டுமே இளைஞர்கள் அதிகம் உள்ளனர் என்று த.மா.கா. மாநில தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அரியலூரில் 5ஆம் ஆண்டு தொடக்க விழாவில் த.மா.கா. மாநில தலைவர் ஜி.கே.வாசன் கூறுகையில், தேர்தலுக்காக தொடங்கப்பட்ட கட்சி அல்ல த.மா.கா.. லட்சியத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சியாகும் தமிழகத்தில் த.மா.கா. கட்சியில் மட்டுமே இளைஞர்கள் அதிகம் உள்ளனர். கஜா புயலால் தமிழக கடலோர பகுதிகளில் வாழும் மக்கள் பெரும் துயரத்தில் உள்ளனர். துயரம் துடைக்கப்படவில்லை. புயல் பாதித்த பகுதிகளில் கடந்த 15 நாட்களாக மக்கள் இருட்டில் பயந்து வாழ்க்கையை நடத்துகின்றனர்.மத்திய, மாநில அரசுகள் மனிதாபிமானத்துடன் செயல்பட வேண்டும். தாமதிக்கப்பட்டு வழங்கப்படும் உதவிப்பொருட்கள், உதவி மறுக்கப்பட்டதாகவே கருதப்படும். கஜா புயலுக்கு வழங்க வேண்டிய நிவாரணத் தொகையில் பாதியை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும். கூட்டணி, தேர்தல் காலத்தில் முறையாக முடிவு எடுக்கப்படும். தமிழகத்தின் அனைத்து பிரச்னைகளிலும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபடவில்லை என்றும் த.மா.கா. மாநில தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…