விளையாட்டு வீரர்களுக்கு நற்செய்தி….வேலைவாய்ப்பு உள் ஒதுக்கீடு 2% இருந்து 3% உயர்த்தி……………முதல்வர் அறிவிப்பு…!!!

Published by
kavitha

விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு உள் ஒதுக்கீட்டை 2 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
இந்ந்லையில் கடந்த ஆகஸ்ட் மாதம்  நடைபெற்ற சுதந்திர தின விழாவின்போது  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அரசு வேலைவாய்ப்பில்  இடஒதுக்கீடு பற்றி அறிவித்திருந்தார்.
Related image
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முதல்வருக்கு விளையாட்டு சங்கங்களின் சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த முதலமைச்சருக்கு கராத்தே, வில்வித்தை போன்ற சாகசங்களை அரங்கேற்றி அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த வரவேற்பை ஏற்ற முதலமைச்சர் அங்கிருந்து புறப்பட்டு சென்று, மாணவர்களுடன் சேர்ந்து முதல்வர் பழனிச்சாமி கூடைப்பந்து விளையாடினார்.பின்னர் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கல்வியும் விளையாட்டும் இரு கண்களைப் போன்றது என்று குறிப்பிட்டார். விளையாட்டை மேம்படுத்த தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளைப் பற்றி பட்டியலிட்டார்.

மேலும், தமிழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு இட ஒதுக்கீட்டை 2 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக உயர்த்தப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

இந்நிலையில் விளையாட்டுகள் மூலம் உடல் ஆரோக்கியம் பெறும் என்று குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, மாணவர்கள் செல்போன், கம்ப்யூட்டர்களில் விளையாடுவதை தவிர்த்துவிட்டு, களத்தில் இறங்கி விளையாடும் விளையாட்டுகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இவ்விழாவில், தேசிய பள்ளிக்குழும விளையாட்டுப் போட்டிகளில் வென்ற நான்காயிரத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு 8 கோடி ரூபாய்க்கும் அதிகமான ரொக்கப்பரிசை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
DINASUVADU

Published by
kavitha

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

12 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

13 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

14 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

14 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

14 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

14 hours ago