தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு…! சென்னை  வானிலை ஆய்வு மையம்

Default Image

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

நேற்று  ரெட் அலர்ட் எச்சரிக்கை திரும்பப் பெறப்படுகிறது என்று அறிவித்தது வானிலை ஆய்வு மையம்.இதன் பின்னர்  இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் ,தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் அறிவிப்பு வெளியிட்டது. அதாவது வருகின்ற 9 ஆம் தேதி வரை கனமழை பெய்யும்.
இந்நிலையில் இன்று மீண்டும் சென்னை  வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஓன்று வெளியிட்டுள்ளது.அதில்  தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு கன்னியாகுமரி, நெல்லை, தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.வங்கக்கடல் பகுதியில் இன்று முதல் 9ஆம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் சென்னை  வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்