ஷட்டர் பழுதடைந்த பாலக்காடு, பரம்பிக்குளம் அணையை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், ‘ அணையில் இருந்து நீர் வெளியேறுவதை பார்க்கையில் மனம் வேதனைப்படுகிறது.’ என குறிப்பிட்டார்.
கேரளா மாநிலம் பாலக்காட்டில் அமைந்திருக்கும், பரம்பிக்குளம் அணை தான் கேரள மாநிலம் பாலகாடு, திருசூர் உட்பட தமிழகத்தில் கோவை சுற்றுவட்டார பகுதிக்கும் நீர் ஆதாரமாக திகழ்கிறது.
அந்த பரம்பிக்குளம் அணையில் நேற்று அதிகாலை 1 மணி அளவில் தண்ணீர் திறக்கும் மதகு (ஷட்டர் செயின்) பழுதடைந்த காரணத்தால், ஷட்டர் தானாக திறந்து அணையில் உள்ள நீர் வெளியேறி அருகில் உள்ள கிராமங்களில் வெள்ளம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு விட்டது.
இதனை அடுத்து, பரம்பிக்குளம் அணையில் இருந்து வரும் நீர் வழிப்பாதையில் இருக்கும் கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுளள்னர்.
இந்த அணை கேரளாவில் இருந்தாலும் , தமிழகத்திற்கும் நீர் ஆதாரமாக இருப்பதால் தமிழக அரசும் இதன் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
இன்று, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் செந்தில் பாலாஜி, நீர் வளத்துறை முதன்மை செயலர் சந்தீப் சக்சேனா ஆகியோர் பரம்பிக்குளம் அணையில் உடைந்த பகுதிகளை பார்வையிட்டனர்.
அதனை பார்த்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், ‘ நான் வந்து பார்க்கும் போது, 16,500 கன அடி நீர் வெளியேறி வருகிறது. அதற்கு முன்னர் 20 ஆயிரம் கன அடி நீர் வெளியேறி வந்துள்ளது. தண்ணீர் வெளியேறும் காட்சியை பார்க்கையில் மனம் வேதனை அடைகிறது. கிட்டத்தட்ட 6 டிஎம்சி அளவு நீர் வெளியேறி இருக்கும்.
தண்ணீர் குறிப்பிட்ட அளவு வெளியேறிய பிறகு தான் ஷட்டர் பிரச்சனையை சரி செய்ய முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.’ என பேசியுள்ளார் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…