சென்னை உயர் நீதிமன்றம் காவல் நிலையத்தில் கட்டபஞ்சாயத்து செய்த விவகாரம் தொடர்பாக அம்பத்தூர் எஸ்டேட் காவல் ஆய்வாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கில் தனியார் நிறுவனம் தொடர்ந்த செக் மோசடி வழக்கில், அம்பத்தூரை சேர்ந்த கணேசன் என்பவருக்கு பூந்தமல்லி நீதிமன்றம், ஓராண்டு சிறை தண்டனை வழங்கியது. இதை எதிர்த்து கணேசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், மூன்று மாத இடைவெளியில் இரு தவணைகளில் 10 லட்சம் ரூபாயை கணேசன் டிபாசிட் செய்ய வேண்டும் எனவும், பணத்தை வழங்காவிட்டால் ஜாமீனை ரத்து செய்யக் கோரி புகார்தாரர் பூந்தமல்லி நீதிமன்றத்தை அணுகலாம் என்ற நிபந்தனைகளுடன் 2016-ம் ஆண்டு உத்தரவிட்டார்.
இந்நிலையில் பணத்தை செலுத்தாததால் கணேசனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய கோரி பூந்தமல்லி நீதிமன்றத்தில் தனியார் நிறுவனம் ஒரு மனு செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கணேசனுக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்தது.
இதனிடையே அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலைய ஆய்வாளர், கணேசனை பிடித்துச் சென்று வழக்கு தொடர்ந்த தனியார் நிறுவன நிர்வாகிகளையும் வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளார். கணேசனின் தந்தையின் பெயரில் நெல்லையில் உள்ள சொத்துக்கள் மீதான அதிகாரத்தை தவறாக புகார்தாரர் தரப்புக்கு எழுதிக் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் தொடர்பாக, கணேசன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்வதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். பின்னர், இந்த வழக்கு தொடர்பாக, அக்டோபர் 4ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அம்பத்தூர் எஸ்டேட் காவல் ஆய்வாளருக்கு நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டது.
DINASUVADU
சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர் பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…
டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…