ஆன்லைன் மூலம் மாணவர்கள் பாடம் கற்க பள்ளிக்கல்வித்துறை சிறப்பு இணையதளத்தை உருவாக்கி உள்ளது.
கொரோனா பாதிப்பு காரமாக தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது.இதனால் போக்குவரத்து சேவை, வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டது.
இந்நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டதால் பல மாநிலங்களில் 1 முதல் 9 வகுப்பு வரை தேர்வின்றி தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. மேலும், பல கல்லூரிகளில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், முதற்கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டபோது 10 வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 14 தேதிக்கு பிறகு தேர்வு நடைபெறும் என தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது. பின்னர் மத்திய அரசு மீண்டும் 19 நாள்கள் ஊரடங்கு நீடிக்கப்பட்டதால் 10 வகுப்பு தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
மேலும், 10 வகுப்பு தேர்வுகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்தது. இதையெடுத்து தற்போது அனைத்து மாணவர்களும் தொடர் விடுமுறையில் வீட்டில் உள்ளனர். சில தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலமாகவும், ஜூம் செயலி மூலமாகவும் பாடங்களை நடத்தி வருகின்றனர்.
ஆனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை இதனால், பள்ளிக்கல்வித்துறை ஆன்லைன் மூலமாக கல்வி கற்க சிறப்பு இணையதளத்தை உருவாக்கி உள்ளது. e-learn.tnschools.gov.in என்ற இணையதளம் மூலமாக மாணவர்கள் அடுத்த கல்வியாண்டுக்கான பாடங்களையும், 10ஆம் வகுப்பு மாணவர்கள் எதிர்கொள்ள உள்ள பொதுத்தேர்வுக்கும் தயார் செய்து கொள்ளலாம்.
சென்னை : அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்த காரணத்தால் SDPI கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர்…
அமெரிக்கா : இந்திய விண்வெளி ஆய்வில் புதிய அத்தியாயத்தை எழுத உள்ளது. ஏனென்றால், சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய…
சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் அண்மையில் பாஜக கூட்டணி அமைத்தது. பாஜக மூத்த தலைவரும், மத்திய…
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…