5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு -தமிழக அரசு அறிவிப்பு

Default Image

தமிழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று  தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு அறிவித்த அறிவிப்பில்,நடப்புக் கல்வி ஆண்டில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும். தேர்வு முடிவுகளை கொண்டு மாணவர்களின் தேர்ச்சியை 3 ஆண்டுகளுக்கு நிறுத்திவைக்க வேண்டாம் என்று  தேர்வு நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வி இயக்குநர்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழி பாடங்களுக்கு இனி ஒரே தேர்வு நடத்தப்படும். மொழித்தாள்களுக்கான ஒரே தேர்வு நடைமுறை நிகழ் கல்வி ஆண்டிலேயே அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்