“1600 தமிழக மீனவர்களின் வலையை அறுத்து” இலங்கை கடற்படை அட்டூழியம்..!!வெறும் கையுடன் திரும்பிய மீனவர்கள்..!!

Default Image

ஆயிரத்து 600 மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.இந்நிலையில் கடற்படை வலைகளை அறுத்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து  400க்கும் மேற்பட்ட படகுகளில் சுமார் ஆயிரத்து 600 மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

மீனவர்கள் கச்சத்தீவு – தனுஷ்கோடி இடையே மீன்பிடித்து கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் வலையை அறுத்து எறிந்துள்ளனர். இதனால் தமிழக மீனவர்களுக்கும் இலங்கை கடற்படையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மீன்பிடித்தால் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்படுவோம் என்ற அச்சம் காரணமாக, மீன்பிடிப்பதை பாதியிலேயே  நிறுத்திவிட்டு மீனவர்கள் வழக்கமான மீன்களை விட குறைவான மீன்களோடு கரை திரும்பினர்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்