#Breaking:தமிழகத்தில் இன்று 36 ஆயிரத்தை கடந்த தொற்று பாதிப்பு….467 பேர் உயிரிழப்பு !

Default Image

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 36,184 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.467 பேர் உயிரிழப்பு.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 36,184 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,70,988 பேராக அதிகரித்துள்ளது, அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 5,913 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 467 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதுவரை தமிழகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19,598 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இன்று கொரோனாவிலிருந்து 24,478 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையிலும் 14,76,761 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,74,112 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 2,59,49,517 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தற்போது கொரோனா வார்டில் 2,74,629 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்