மத்திய அரசானது அண்மையில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியது. அந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. அதிலும், வடகிழக்கு மாநிலங்கள், டெல்லி என பல்வேறு இடங்களில் போராட்டம் தீவிரமாகி வருகிறது.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் தடியடி தாக்குதல் நடத்தினர். மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதில் தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றனர். இந்த போராட்டம் தற்போது தீவிரமடைந்து வருகிறது. கோவையில் பாரதிதாசன் பல்கலைக்கழத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் பண்வாரிலால் புரோஹித் கலந்து கொள்ள உள்ளார். இதற்காக அப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் மாணவர்கள் ஆளுநர் வருகைக்கு முன்னர் போராட்டம் நடத்தி வந்தனர். போராட்டம் நடத்திய மாணவர்களை அங்கிருந்த போலீசார் அப்புறப்படுத்தியதால் அங்கு பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.
அதேபோல சென்னை புதுக்கல்லூரியிலும் மாணவர்கள், கல்லூரி வளாகத்திற்குள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருச்சி தூய வளனார் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை : நெல்லை கங்கைகொண்டானில் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக இன்று முதலமைச்சர்…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
சென்னை : வழக்கமாக அஜித் படங்கள் என்றாலே அவருக்கென தனி மாஸான ஓப்பனிங் பாடல் இருக்கும். மாஸ் வசனங்களுடன் அவருடைய அறிமுக…
மகாராஷ்டிரா : இந்தியா – இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல்…
அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பலரும்…
டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட…