தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார் முதல்வர்!

Default Image

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை 5 மணிக்கு முதல்வர் பழனிசாமி சந்திப்பதாக கூறிய நிலையில், முதல்வர் தற்பொழுது ஆளுநரை சந்தித்து பேசுகிறார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். மேலும், அவருடன் மூத்த அதிகாரிகள் சிலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த சந்திப்பில் தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதுகுறித்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து முதல்வர் விளக்கமளிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து 4-ஆம் முறையாக ஆளுநரை முதல்வர் பழனிச்சாமி சந்திப்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்