என்.எல்.சியில் வெளிமாநில பொறியாளர்கள்… பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்.!

Default Image

நெய்வேலி என்.எல்.சி தொழிற்சாலைக்கு இடம் கொடுத்தவர்களுக்கு பட்டதாரி பொறியாளர் பணியில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

நெய்வேலியில் இயங்கி வரும் என்.எல்.சி தொழிற்சாலையில் அன்மையில் புதியதாக பொறியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் வெளிமாநிலத்தவர்கள். ஒருவர் கூட தமிழ்நாட்டை சேர்ந்தவர் இல்லை.

இது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், என்.எல்.சிக்கு இடம் கொடுத்தவர்களுக்கு பட்டதாரி பொறியாளர் பதவியில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனவும், பிரதமர் உடனே தலையிட்டு அதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதில் தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்