வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியை பெற்ற இந்திய அணிக்கு என் வாழ்த்துக்கள் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.இந்திய அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில், பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் ,டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,பல நட்சத்திர வீரர்கள் இல்லாத நிலையிலும் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியை பெற்ற இந்திய அணிக்கு என் வாழ்த்துக்கள். இதில் நமது மூன்று தமிழக வீரர்களின் சிறப்பான பங்களிப்பு பெரும் மகிழ்ச்சியை தருகிறது என்று தெரிவித்துள்ளார்.இந்திய அணியில் தமிழக வீரர்கள் அஸ்வின்,நடராஜன் ,சுந்தர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.கடைசி டெஸ்டில் மட்டும் காயம் காரணமாக அஸ்வின் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தனித்…
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த சட்ட…
சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…
சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார்…
சென்னை : என்னதான் ஆச்சு சென்னை அணிக்கு என்கிற வகையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…
சென்னை : நேற்று மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, சட்டப்பேரவை கூடிய நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…