தமிழக சட்டப்பேரவை மீண்டும் புதன்கிழமை கூடுகிறது

Default Image

தமிழக சட்டப்பேரவை மீண்டும் புதன்கிழமை காலை 10 மணிக்கு கூடுகிறது.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று நடைபெற்றது.பேரவையில், முன்னாள் உறுப்பினர் சந்திரன், முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் காத்தவராயன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.பேரவையில், மறைந்த திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

பின் மறைந்த சட்டமன்ற உறுப்பினருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்றைய பேரவை அலுவல்கள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இறுதியாக தமிழக சட்டப்பேரவை மீண்டும் புதன்கிழமை காலை 10 மணிக்கு கூடுகிறது என்று சபாநாயகர் தனபால் அறிவித்தார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்