தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்:இன்று  இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை ஒத்திவைக்கப்படும் …!

Default Image

இன்று  இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை ஒத்திவைக்கப்படும் என்று சபாநாயகர் தனபால்  தெரிவிதுள்ளார்.

சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது:

நேற்று  (ஜனவரி 2 ஆம் தேதி) தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்றது ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் நடைபெற்றது.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை:

அனைவருக்கும் காலை வணக்கம், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என தமிழில் பேசி சட்டப்பேரவையில் உரையை தொடங்கினார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.பின் முடிவு பெற்றது.

இதன் பின் சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முதல்வர், துணை முதல்வர் மற்றும் மூத்த அமைச்சர்களும், திமுக சார்பில் துரைமுருகன், திமுக கொறடா சக்கரபாணி பங்கேற்றனர்.

இந்த கூட்டத்திற்கு பின் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகின்ற 8 ஆம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் தனபால்  தெரிவிதுள்ளார்.

அதேபோல் இன்று  இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை ஒத்திவைக்கப்படும்.4ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்.8ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து பதிலுரை என்று சபாநாயகர் தனபால்  தெரிவிதுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்