ப.சிதம்பரத்தின் நடவடிக்கை மோசமான முன் உதாரணம்! தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

Default Image

ஐஎன்எக்ஸ் நிறுவன ஊழல் வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் நேற்று டெல்லியில் அவரது வீட்டில் வைத்து சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரிடம் தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் கூறுகையில், ‘ ஐஎன்எக்ஸ் நிறுவன ஊழல் வழக்கில் ப.சிதம்பரம் இந்த வழக்கை எதிர்கொண்ட விதம்  மோசமான முன் உதாரணமாகிவிட்டது. தமிழகத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் இப்படி கைது செய்யப்பட்டது வருத்தமளிக்கிறது.

நேற்று நடந்த குழப்பங்களுக்கும், அவை கைது செய்யப்பட்டதற்கும் அவரே காரணம். அமித்ஷாவிற்கும், ப.சிதம்பரத்திற்கும் இடையே மோதல் என்பது உண்மையல்ல. என பத்திரிக்கையாளர்களிடம் தெரித்துவித்தார்.

 

இந்திராணி முகர்ஜி

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்