கொத்துக் கொத்தாக வாக்காளர்கள் பெயர் நீக்கம்… தமிழிசை சௌந்தரராஜன் வருத்தம்!

Published by
பாலா கலியமூர்த்தி

Election2024: பல லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமை மறுக்கப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் முதல் கட்டம் கடந்த 19ம் தேதி முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்த சூழலில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்களிக்க முடியவில்லை என பலர் வேதனை தெரிவித்து வருகின்றனர். பலவேறு இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும், பட்டியலில் பெயர் இல்லை என புகார் எழுந்தது.

இதனால் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற முடியவில்லை என வாக்காளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், பல லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமை மறுக்கப்பட்டிருப்பது வருத்தம் அளிப்பதாக தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

இதுகுறித்து கோவையில் செய்தியாளர் சந்திப்பில் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது, தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்து இருக்கிறது. தேர்தலை சுமுகமாக முடித்த தேர்தல் ஆணையத்துக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். ஆனால், பல லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமை மறுக்கப்பட்டிருப்பது என்பது வருத்தம் அளிக்கிறது.

தேர்தலில் வாக்களிப்பது என்பது ஒவ்வொருவரின் உரிமை. வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தும் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டு இருக்கிறது என்பது வேதனையான உண்மை. கொத்துக் கொத்தாக வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. எனவே தேர்தல் ஆணையம் இன்னும் தீவிரமாக இதை கண்காணித்திருக்க வேண்டும் என்பது எனது கருத்து.

இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையம் தீவிரமாக பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். ஒரு வாக்காளருக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டாலும் அது ஜனநாயகத்தில் சரியில்லை என்பது தான் எங்களது வாதம். மேலும் இந்த விவகாரத்தில் திமுக அமைதியாக இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது எனவும் குறிப்பிட்டார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…

15 hours ago
காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.., வெளியான அதிர்ச்சி வீடியோ.!காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.., வெளியான அதிர்ச்சி வீடியோ.!

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.., வெளியான அதிர்ச்சி வீடியோ.!

புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…

16 hours ago
அமித்ஷா செஞ்சது வருத்தம்..”NDA”கூட்டணியில் தான் இருக்கிறோம் – ஓபிஎஸ் ஸ்பீச்!அமித்ஷா செஞ்சது வருத்தம்..”NDA”கூட்டணியில் தான் இருக்கிறோம் – ஓபிஎஸ் ஸ்பீச்!

அமித்ஷா செஞ்சது வருத்தம்..”NDA”கூட்டணியில் தான் இருக்கிறோம் – ஓபிஎஸ் ஸ்பீச்!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

16 hours ago

பிறந்தநாள் விழாவில் சாப்பிட்டவர் உயிரிழந்த சோகம்.., 27 பேர் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…

16 hours ago

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…

17 hours ago

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…

17 hours ago