நேற்று சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் செய்தியாளர்களுக்கு மத்திய மந்திரி ராம் விலாஸ் பஸ்வான் பேட்டியளித்தார். அந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசையும் கலந்து கொண்டார்.
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பின்னர் அங்கு தேனீர் விருந்து ஏற்பாடு செய்தனர். அதற்கு முன் மத்திய மந்திரி ராம் விலாஸ் பஸ்வானுக்கு டாக்டர் தமிழிசை பூச்செண்டு கொடுத்து வரவேற்றார்.
இந்நிலையில் நேற்று அந்த நட்சத்திர ஓட்டலில் ஏராளமான பாஜக தொண்டர்கள் மற்றும் நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்துவதற்காக ஹோட்டல் ஊழியர்கள் என பலர் இருந்தனர். அப்போது தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் செல்போன் திடீரென மாயமானது. உடனடியாக அவருடைய செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டனர்.ஆனால் போனில் இருந்து சத்தம் எதுவும் கேட்கவில்லை.
இது தொடர்பாக காவல்துறை விசாரிக்கும்படி தமிழிசை சௌந்தராஜன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…