வன்னியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
வன்னியர்கள், சீர்மரபினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அரசுப் பணி நியமனங்களிலும், கல்வி வாய்ப்புகளிலும் பயன்பெறும் வகையில் சிறப்பு ஒதுக்கீடு வழங்கி முதலமைச்சர் முக ஸ்டாலின் அரசாணை வெளியிட்டு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, வன்னியர்கள் 10.5%, சீர்மரபினர் 7%, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5% என சிறப்பு ஒதுக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும், எம்எல்ஏயுமான வேல்முருகன் இன்று காலை 11.00 மணியளவில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், முதல்வருமான முக ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன் எம்எல்ஏ, வன்னியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ளது. இதற்காக போராடிய அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன். அதிமுக அரசு அரசனை வெளியிட்டு, சட்டம் ஏற்றியதோடு தேர்தல் அதிகாரத்திற்கு சென்றுவிட்டது.
அதனால் ஒரு வன்னியர்கள் கூட தமிழ்நாட்டில் இதுவரை பயன்பெறவில்லை. இனி தமிழ்நாட்டில் ஓராயிரம் வன்னியர்கள் பயன்பெற்றாலும் அல்லது ஒரு கோடி வன்னியர்கள் பயன்பெற்றாலும் அது திமுக ஆட்சியில் தான் நடைமுறைப்படுத்த முடியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : ‘மாநகரம்’, ‘வில் அம்பு’, ‘வழக்கு எண் 18/9’, மற்றும் சமீபத்தில் வெளியான ‘இறுகப்பற்று’ போன்ற படங்களில் தனது…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகளின் உள்ளாட்சி பிரதிநிதித்துவத்திற்காக முக்கிய சட்டத் திருத்த மசோதவை கொண்டு…
சென்னை : மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த போது, தமிழக அரசியலில் முக்கிய…
சென்னை : வரும் மே 11ஆம் தேதியன்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற உள்ளது. கருத்து…
பெங்களூர் : ஐபிஎல் தொடரில் ஒரு முறை கோப்பை வெல்லவில்லை என்றாலும் கூட ஆர்சிபிக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லியே…
சென்னை : வேலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிமுக -பாஜக…