தமிழை அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

Default Image

உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை  வைத்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் 9 மாடி நிர்வாக கட்டிடத்திற்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து, வணிக வழக்குகளை விசாரிக்க சென்னையில் அமைக்கப்பட்ட தனி நீதிமன்றத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, சட்ட அமைச்சர் ரகுபதி, நீதிபதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், நான் முதலமைச்சராக பதவியேற்ற பின் நீதிமன்றத்தில் பங்கேற்கும் முதல் விழா இது. உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது பெருமைக்குரியது; மக்களின் மனசாட்சி என்ற முறையிலேயே அவரது தீர்ப்புகளும், உரைகளும் உள்ளது.

மேலும், நீதி நெறிமுறைகளின்படி சட்டங்களை பின்பற்றி தமிழகத்தில் ஆட்சி வழங்கி வருகிறோம். தமிழக அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை  வைத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்