தமிழகத்திற்கு முதலிடம் அளித்தது மக்களை ஏமாற்றவே – வைகோ

Default Image
  • நிர்வாகத்தில் சிறப்பாக திகழும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளது.  
  • முதலிடம் அளித்துள்ளது மக்களை ஏமாற்றவே என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

எந்தெந்த மாநிலங்கள் நிர்வாகத் திறமையில் சிப்பாக  உள்ளன என்ற பட்டியலை  மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறை வெளியிட்டது. இதில், நிர்வாகத்தில் சிறப்பாக திகழும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.  சட்டம் ஒழுங்கு, பொதுமக்கள் பாதுகாப்பு, உள் கட்டமைப்பு போன்றவைகளில் தமிழகம் 5.62 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில்,நிர்வாகத்திறன் உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழகத்திற்கு முதலிடம் அளித்து உள்ளது.மக்களை ஏமாற்றவே என்று கூறினார்.மருத்துவ கல்லூரிகளில்  69 %  இடஒதுக்கீட்டை பெறாமல், மத்திய அரசுக்கு துணை போய் தமிழக அரசு வஞ்சகம் செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்