Annamalai BJP EB [Image-FB/@annamalai]
தமிழக அரசியலில் நேர்மையான, நியாயமான ஆட்சி வர வேண்டும் என பாஜகவினர் சபதம் என அண்ணாமலை பேட்டி.
முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. காமராஜரின் பிறந்த நாளையொட்டி, அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும், அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில், சென்னையில் உள்ள காமராஜர் திருவுருவ சிலைக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கரு.நாகராஜன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, இந்தியாவில் காமராஜரைப் போன்று ஒரு முதலமைச்சர் இல்லை. தமிழகத்தில் விவசாய மாநிலமாக மாற்றியதில் காமராஜரின் பெரும் பங்கு உள்ளது. 9 ஆண்டுகள் ஆட்சி செய்த காமராஜர் தொழில், அரசியல் உள்ளிட்ட 360 டிகிரி முதலமைச்சர் என்றார்.
இதுபோன்று காமராஜர் வரலாறு குறித்து பேசிய அண்ணாமலை, இந்த நன்நாளில் தமிழக அரசியலில் நேர்மையான, நியாயமான ஆட்சி வர வேண்டும் என பாஜகவினர் சபதம் எடுத்துள்ளோம் என தெரிவித்தார். மேலும் கூறுகையில், தமிழகத்தின் உரிமை தொடர்ந்து பறிபோகியுள்ளது. திமுக எம்பிக்கள் கூட்டத்தில் கர்நாடகாவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றிருக்க வேண்டும். மத்திய அரசை குறை சொல்வது மட்டுமே தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது என விமர்சித்துள்ளார்.
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…
உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…
கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…
இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…