உலகில் நீளமான நாக்கை கொண்ட தமிழக இளைஞர்….! நாக்கின் நீளம் எவ்வளவு .தெரியுமா.?

Published by
லீனா

சிவகங்கை மாவட்டம் திருத்தங்கலை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் பிரவீனின் நாக்கு 10.8 செ.மீ நீளமாக காணப்படுகிறது.

சாதாரணமாக ஆண்களின் நாக்கு 8.5 செ.மீ-ரும், பெண்களின் நாக்கு 7.5 செ.மீ-ரும் வளரும் என கூறப்படுகிறது. ஆனால், சிவகங்கை மாவட்டம் திருத்தங்கலை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் பிரவீனின் நாக்கு மிகவும் நீளமாக காணப்படுகிறது. அவரது நாக்கின் நீளம் 10.8 செ.மீ ஆகும்.

இந்த நாக்கை வைத்து அவர், 110 முறை மூக்கை நாக்கால் தொட்டுள்ளார். 142 முறை முழங்கையை தொட்டுள்ளார். தமிழில் உள்ள 247 எழுத்துக்களையும் ஒரு மணி 22 நிமிடம் 26 வினாடிகளில் நாக்கால் எழுதி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இல் இடம் பெற்றுள்ளார். ஒரு நிமிடத்தில் 219 முறை மூக்கைத் தொட்டு ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்சில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றுள்ளார். ‘indiaன் logest togue’ என்ற டைட்டிலை பெற்றுள்ளார்.

இவர் காமராஜர் உள்ளிட்ட தலைவர்களின் படங்களை தனது நாக்கினால் வரைகிறார். நாக்கில் கிளவுஸ் அணிந்து பெய்டினை தொட்டு சார்ட்டில் தமிழ் எழுத்துக்களை எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திய அளவில் எனது சாதனைகள் பதிவு செய்யப்பட்டாலும் பொருளாதார உதவிகள் இல்லாத காரணத்தால் உலக அளவில் சாதனைகளை பதிவு செய்ய முடியவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும் 1330 குறள்களையும் நாக்கால் எழுதி கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவேன் என்றும், தேசிய தலைவர்களை பெரிய அளவில் வரைய உள்ளேன் என்றும் கூறியுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த நிக் ஸ்டோபல் என்பவர் தான் உலகில் மிக நீளமான நாக்கை கொண்டவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். 2012-ம் ஆண்டு இந்த சாதனையை நிகழ்த்திய போது, அவரது நாக்கின் நீளம் 10.1செ.மீ. இதை வைத்து பார்க்கையில், பிரவீனின் நாக்கு நீளமாக தான் காணப்படுகிறது.எனவே இவர் கின்னஸ் ரெக்கார்டில் இடம்பிடிக்கக் கூடிய தகுதியை பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது.

Published by
லீனா

Recent Posts

“அந்த படத்துக்கு பதிலா கொட்டுக்காளி, ஆடுஜீவிதம் படங்களை ஆஸ்காருக்கு அனுப்பியிருக்கலாம்”…வசந்த பாலன் கருத்து!

“அந்த படத்துக்கு பதிலா கொட்டுக்காளி, ஆடுஜீவிதம் படங்களை ஆஸ்காருக்கு அனுப்பியிருக்கலாம்”…வசந்த பாலன் கருத்து!

சென்னை : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் விருது என்றால் அது "ஆஸ்கர் விருது" தான். இந்த…

9 mins ago

“24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிட அனுமதி.,” தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை.!

சென்னை : தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று காலை 11 மணியளவில் டாக்டர் மல்லிகை தெருவில்…

1 hour ago

லட்டு விவகாரம்., பவன் கல்யாணிடம் மன்னிப்புக் கேட்ட ‘மெய்யழகன்’ கார்த்தி.!

சென்னை : கார்த்தி, அரவிந்த் சாமி நடித்து, '96' பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் இந்த வாரம் ரிலீசாக உள்ள…

2 hours ago

மக்களே! தமிழகத்தில் (25.09.2024) புதன்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 25.09.2024) அதாவது , புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…

2 hours ago

பாடகி சுசீலா மற்றும் மேத்தாவுக்கு கலைத்துறை வித்தகர் விருது! தமிழக அரசு அறிவிப்பு !

சென்னை : தமிழ் திரைத்துறையில் 5000திற்கும் அதிகமான பாடல்களை படித்துள்ள பின்னணி பாடகியான சுசீலாவிற்கும், தமிழசினிமா துறையில் வசனகர்த்தாவாக கவிஞர்…

2 hours ago

முதல் படமே காதல்.. “சத்தம் போடாம கத்து” அதர்வா தம்பி – அதிதியின் ‘நேசிப்பாயா’ டீசர்.!

சென்னை : இயக்குனர் விஷ்ணு வர்தனின் 10வது படமான நேசிப்பாயா திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் மூலம் மறைந்த…

2 hours ago