ஜிகா வைரஸ் குறித்து தமிழ்நாட்டு மக்கள் அச்சப்பட வேண்டாம் – மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Default Image

கேரளாவின் பாடசாலை பகுதியில் கர்ப்பிணி ஒருவருக்கு நேற்று ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மேலும் 14 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதியானதால், மொத்தம் பாதிப்பு 15 ஆக உயர்ந்துள்ளது. திருவனந்தபுரத்தில் புதிதாக கண்டறியப்பட்ட 15 பேரில் பெரும்பாலானவர்கள் சுகாதார ஊழியர்கள் என கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னையில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர் கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் குறையாத நிலையில், ஜிகா  வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் இந்த வைரஸ் கொசுக்களால் பரவும் கூடியது என்று என தெரிவித்துள்ளார்.

மேலும் கேரளாவின் அண்டை மாநிலமான தமிழகத்துக்கும் இந்த வைரஸ் பாதிப்பு வந்துவிடுமோ என்று மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்