கொரோனா குறித்து பேசுவதற்கு தமிழக அமைச்சர்களுக்கு தடை: முதல்வர் பழனிசாமி அதிரடி

Default Image

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருவதால், நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 724 ஆக உள்ளது.உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17ஆக உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35 ஆக உள்ளது.

இதற்கு இடையில் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா குறித்த தகவல்களை  அவ்வப்போது நாட்டு மக்களுக்கு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா  வைரஸ் குறித்த தகவல்களை  மற்ற அமைச்சர்கள் யாரும் தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளிக்க கூடாது என்று முதலமைச்சர் பழனிசாமி தடை விதித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்