குறைந்தது 7 நாட்களாவது தமிழக சட்டப்பேரவை நடைபெற வேண்டும் – துரைமுருகன்!

Default Image

குறைந்தது ஏழு நாட்களாவது தமிழக சட்டப்பேரவை நடத்தப்பட வேண்டுமென துரைமுருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னையில் நடத்தப்பட்ட அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் வரும் 14 ஆம் தேதி கூடும் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரை மூன்று நாட்கள் நடத்த வேண்டும் என தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறுவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக எம்எல்ஏக்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்வது கட்டாயம் எனவும் வருகிற 14, 15, 16 ஆகிய தேதிகளில் தமிழக சட்டப்பேரவை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த திமுக சட்டப்பேரவை துணைத்தலைவர் துரைமுருகன், தமிழக சட்டப்பேரவையை குறைந்தது ஏழு நாட்களாவது நடத்த வேண்டும் என கூறியுள்ளார். மேலும் மாநில அரசை மதிக்காமல் புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கொண்டு வருகிறது. இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்