தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள்.! முதல் நாள் அலுவல் நிறைவு.! நாளை ஒத்திவைப்பு.!

Default Image

மீண்டும் நாளை காலை 10 மணிக்கு பேரவை கூடும் என்றும் சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு. 

இன்று காலை 10 மணியளவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டப்பேரவை தொடங்கியது. முதல் நாளான இன்று எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 61 எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையை புறக்கணித்தனர்.

ஓபிஎஸ் தரப்பில் எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்கு வருகை புரிந்தனர். இந்த நிலையில், எலிசபெத் ராணி, அஞ்சலை பொன்னுசாமி, முலாயம் சிங் யாதவ் உள்ளிட்ட பிரபலங்களின் மறைவுக்கும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து, தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், மீண்டும் நாளை காலை 10 மணிக்கு பேரவை கூடும் என்றும் சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்