கொரோனா அச்சத்தால் தமிழக சட்ட பேரவை இடம் மாற்ற ஆலோசனை!

Default Image

கொரோனா அச்சத்தால் தமிழக சட்டப்பேரவை குளிர்கால கூட்டத் தொடருக்கான இடத்தை மாற்ற ஆலோசனை நடைபெறுகிறது.

வருடம் தோறும் தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் மற்றும் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் மார்ச் மாதம் நடைபெறுவது வழக்கம். அதுபோல இந்த வருடமும் மார்ச் மாதம் 9 ஆம் தேதி தொடங்கிய கூட்டம், கொரோனா அச்சத்தால் மார்ச் 24-ம் தேதி அவசர அவசரமாக முடிக்கப்பட்டது. சட்டவிதிகளின்படி குளிர்கால கூட்டத்தொடரை கூட்டுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக சட்டப்பேரவைக்கு சமூக இடைவெளியை கடைபிடிப்பது சாத்தியமில்லை என்பதால் மாற்று இடத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடரை கூட்டலாமா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு 6 முறை தமிழக சட்டப்பேரவை மாற்று இடங்களில் நடைபெற்றுள்ளன, எனவே இந்த முறையும் அது போன்று ஏதாவது ஒரு முடிவெடுத்து சட்டப்பேரவை நிச்சயம் கூட்ட வேண்டும் என ஆலோசனை நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்