மீண்டு வருகிறது தமிழகம்…முதல்வர் பழனிச்சாமி தகவல்

Default Image

கொரோனா பாதிப்பிலிருந்து தமிழகம் மீண்டு வருவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிப்பதாக முதல்வர் தகவல் தெரிவித்துள்ளார்.

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி கானொலி வாயிலாக ஆலோசனை நடத்தியனார் அப்போது முதல்வர் கூறியதாவது;-

கொரோனா பாதிப்பிலிருந்து தமிழகம் மீண்டு வருவதாக ஆய்வறிக்கைகள்
கூறுகின்றது.எதிர்க்கட்சிகள் ஒப்பிட்ட பிற மாநிலங்களில் எல்லாம் கொரோனா பரவல் தற்போது அதிகரித்துள்ளது.

பண்டிகை காலங்களில் கொரோனா தடுப்பு விதிகள் முறையாக கடைபிடிக்கப்படுவதை  உறுதி செய்ய வேண்டும்.

பண்டிகை காலங்களில் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்த வேண்டும். காய்ச்சல்  முகாம்களை தொடர்ந்து  மாவட்ட ஆட்சியர்கள் நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பருவமழைக்காலங்களில் அவசர கால முகாம்கள் யார் நிலையில் இருக்க வைத்திருக்க . டெங்கு உள்ளிட்ட பருவகால நோய்களை தடுக்க முன்னெச்சரிக்கை குறித்த ஏற்பாடுகளை  ஆட்சியர்கள் செயல்படுத்த  வேண்டும்.

கொரோனா சிகிச்சை மையங்களில் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து அதன் தேவைகளை பூர்த்தி செய்ய அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் திரையரங்குகளை திறப்பது குறித்து தகவல் தெரிவித்த முதல்வர் ஆட்சியர்கள்.  மருத்துவ வல்லுநர்கள் குழு அளிக்கும் அறிக்கையின் படி நடவடிக்கை  எடுக்கப்படும் என்று தெரிவித்தார்

பருமழை தொடங்க உள்ளதால் மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை மேற்கொள்ள வேண்டும். கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை பாதுகாக்க போதிய தார்ப்பாய்களை தயாரி நிலையில் வைத்திருக்க வேண்டும்.

கோயம்பேடு சந்தையில் பழம், சிறு வியாபாரிகளை அனுமதிப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்