இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் அதிக படுக்கைகள் கொண்ட மாநில தமிழ்நாடு – அமைச்சர் மனோ தங்கராஜ்

Default Image

இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் அதிக படுக்கைகள் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கின்றது என அமைச்சர் மனோ தங்கராஜ் ட்விட். 

அமைச்சர் மனோ தங்கராஜ் குமரி மாவட்டம், கிருஷ்ணன்கோயில் பகுதியில் ₹2 கோடி திட்டமதிப்பில் அமையவிருக்கும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட பணிகளை துவக்கி  வைத்தார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் அதிக படுக்கைகள் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கின்றது. அனைவருக்கும் எந்நேரமும் எளிதான மருத்துவ வசதிகளை அமைத்துத் தரும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் மக்களுக்கு இன்னும் அதிகப்படியான மருத்துவ வசதிகள் கிடைக்கப் பெறுகின்றது.

குமரி மாவட்டம், கிருஷ்ணன்கோயில் பகுதியில் ₹2 கோடி திட்டமதிப்பில் அமையவிருக்கும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட பணிகளை துவக்கி வைத்தேன்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்