தமிழகம் முழுவதும் தொடங்கியது +2 பொது மறுவாய்ப்பு தேர்வு!

Default Image

கொரோனா அச்சத்தால் தமிழகம் முழுவதும் மார்ச் மாதம் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதத்தவர்களுக்கு மறு பொது தேர்வு இன்று தொடங்கியுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் உலகம் முழுவதிலும் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை தமிழகம் முழுவதும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில், கொரோனா பரவல் தமிழகத்திலும் பரவிவிடவே மக்களிடம் அச்சம் காணப்பட்டது.

இருப்பினும் பள்ளி மாணவர்களின் படிப்பு நின்றுவிட கூடாது என்பதற்காக கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் ஆகிய தேர்வுகள் நடைபெற்றது. ஆனால், பல மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை, இவ்வாறு கொரோனா அச்சத்தால் தேர்வு எழுத வராத மற்ற மாணவர்களுக்காக இன்று தமிழகம் முழுவதும் மறு பொது தேர்வு நடைபெறுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்