தமிழ்நாடு மகத்தான தமிழ் அறிஞரை இழந்துவிட்டது – ஓபிஎஸ்

Published by
லீனா

அவ்வை நடராஜன் மறைவுக்கு ஓபிஎஸ் இரங்கல் தெரிவித்து அறிக்கை

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் பிரபல தமிழறிஞருமான அவ்வை நடராஜன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக நேற்று சென்னையில் அவரது இல்லத்தில் காலமானார்.

இவரது மறைவுக்கு ஓபிஎஸ் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த இரங்கல் குறிப்பில், ‘தலை சிறந்த தமிழறிஞர் அன்புச் சகோதரர் முனைவர் திரு. அவ்வை நடராஜன் அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். தமிழ் பேராசிரியர், துணை இயக்குநர், மொழி பெயர்ப்புத் துறை இயக்குநர் என பல பதவிகளை வகித்ததோடு, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் ஆட்சிக் காலத்திலே தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக இல்லாமலேயே அரசுச் செயலாளராக பணியாற்றிய பெருமைக்குரியவர் திரு. அவ்வை நடராஜன் அவர்கள். மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக் காலத்திலே தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பணியாற்றியவர். கலைமாமணி, பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளுக்குச் சொந்தக்காரர்.

தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பணி அளப்பரியது. தமிழ்நாடு ஒரு மகத்தான தமிழ் அறிஞரை இழந்துவிட்டது. திரு. அவ்வை நடராசன் அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாது பேரிழப்பு ஆகும். திரு. அவ்வை நடராஜன் அவர்களை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

அனிருத்தை சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்த சூப்பர் ஸ்டார்.!

அனிருத்தை சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்த சூப்பர் ஸ்டார்.!

சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…

8 mins ago

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

57 mins ago

வேட்டையன் இசை வெளியீட்டு விழா.. ரஜினி சொன்ன “கழுதை – டோபி” கதை!

சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…

60 mins ago

அப்பா என் பாட்டு எப்படி இருக்கு.. மாரி செல்வராஜ்-க்கு டஃப் கொடுத்த அவரின் குட்டி வாண்டு.!

சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…

1 hour ago

“அவருக்கு துளிகூட பயம் இல்லை” ! ரிஷப் பண்ட்டை புகழ்ந்த ஆடம் கில்கிறிஸ்ட்!

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…

1 hour ago

“அதிமுக மீண்டு வரவேண்டும்” உதயநிதி விருப்பம்.!

சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…

1 hour ago