தமிழக அரசு எந்த வேலை செய்தலும் கூட 20% கமிஷன் கேட்கிறார்கள். வேலையை முடித்தபிறகு 4% கமிஷனை கேட்கிறார்கள் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
திருநெல்வேலியில் கட்சி சார்ந்து பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள விமானம் மூலம் இன்று தூத்துக்குடி வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு நன்றாக இருந்தால்தான் மாநிலம் அமைதியாக இருக்கும். பயங்கரவாதம் தலைதூக்க எல்லா விதமான சூழ்நிலையும் இருக்கின்றது. அதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் திமுக அரசு கட்டுப்பணம், கமிஷன் பணம், கரப்ஷன் பணம் என 3C-க்கு வேலை செய்து வருகிறது. தமிழக அரசு எந்த வேலை செய்தலும் கூட 20% கமிஷன் கேட்கிறார்கள். வேலையை முடித்தபிறகு 4% கமிஷனை கேட்கிறார்கள். ஒரு குடும்பம் அவர்களே அனைத்தை பணத்தையும் வாங்கி கொள்கிறார்கள். இதனால் தான் கட்சியை சேர்ந்த கிளை கழகச் செயலாளர், தொண்டர்கள் யாரும் களத்தில் மக்கள் பணி செய்வதற்கு முன்வரவில்லை.
அதனாலதான் நான் கட்டுப்பணம், கமிஷன் பணம், கரப்ஷன் பணம் என்ற வார்த்தையை பயன்படுத்தினேன். தமிழகம் இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் தமிழக மக்களும் கேள்வி கேட்கும் நிலை வந்துவிட்டது. தமிழகத்தில் நடைபெற்று வரும் ஊழல்கள் பற்றி இன்னும் நான்கு மாதங்களில் தமிழக மக்களே பேசத் தொடங்குவார்கள்.
மத்திய அரசு 2024 ஆம் ஆண்டுக்குள் வீடு தோறும் குடிநீர் கொடுக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்படுத்தி வரும் திட்டத்திலும் தமிழகத்தில் திமுக கரப்ஷன் செய்கிறது என தெரிவித்தார்.
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…
சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…
சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…
சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…