தமிழகத்தில் கொரோனாவின் மூன்றாம் அலை வந்தாலும் அதை தமிழக அரசு வென்று காட்டும் என தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை காரணமாக பாதிப்புகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில், கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னை ஆவடியில் மகளிர் சுய உதவி குழுக்களுடன் இணைந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வீடுகள் தோறும் காய்ச்சல் கணக்கெடுப்பு குறித்த துவக்க விழா இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பின்னர் இருவரும் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து உள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு முன்பதாக அரசு ஆவடி அரசு மருத்துவமனையில் 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட நான்கு லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் கருவியை அமைச்சர் நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோர் மருத்துவமனைக்கு வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் நாசர், திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் ஆய்வு செய்து வருவதாகவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனாவின் 3ஆம் அலை வந்தாலும் தமிழக அரசு அதனை வென்று காட்டும் எனவும் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…