#BREAKING: கூடுதல் கட்டணம் வசூலித்தால் மருத்துவமனை உரிமம் ரத்து- தமிழக அரசு எச்சரிக்கை..!

- கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படும்.
- முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தில் சேருவதற்கான வருமான உச்சவரம்பை இருமடங்காக அதிகரிக்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் தனியார் மருத்துவமனை அரசு கட்டுப்பாட்டில் எடுத்து சிகிச்சை வழங்க வேண்டும் என நாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் தனியார் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படும். இது தொடர்பான புகார்களை அறிவிப்பதற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அந்தப் புகார்களை தனிப்பிரிவு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் அந்த புகார்கள் மீது முறையாகப் பரிசீலித்து சரியான முடிவு எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். மேலும், முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தில் சேருவதற்கான வருமான உச்சவரம்பை இருமடங்காக அதிகரிக்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘அந்த இடத்திற்கு செல்லாததால் தப்பிய தமிழர்கள் 68 பேர்’ – சுற்றுலா சென்ற மதுரை நபர் சொன்ன தகவல்.!
April 23, 2025
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025