நேற்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்து கட்சிக்கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டதிற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து இன்று குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற கோரி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்தார் பினராயி விஜயன்.இதற்கு ஆதரவாக 138 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வலியுறுத்தினார்.
இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், கேரள சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி தீர்மானம் கொண்டு வந்துள்ளது வரவேற்கத்தக்கது .அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களைப் போற்றிப் பாதுகாக்கும் இந்தப் பணியை அனைத்து மாநில சட்டமன்றமும் நிறைவேற்ற வேண்டும் .மேலும் இதனை தமிழக அரசும் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…