தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தொடர்ச்சியாக ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை பணியிடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து வருகிறது. அந்த வகையில், தற்போது, தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, நிலநிர்வாக இணை ஆணையராக எஸ்.செந்தாமரை ஐஏஎஸ், பொதுப்பணித்துறை இணை செயலாளராக மகேஸ்வரி ரவிக்குமார், வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குநராகப் பதவி வகித்து வரும் எம்.அருணா, கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் இணை மேலாண் இயக்குநராகப் பதவி வகித்து வரும் ஷ்ரவண் குமார் ஜதாவத், வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பள்ளிக் கல்வித்துறை துணைச் செயலாளராகப் பதவி வகித்துவரும் ஜே.ஆனி மேரி ஸ்வர்ணா, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை துணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உள்துறை இணைச் செயலாளராகப் பதவி வகித்துவரும் ஏ.ஜான் லூயிஸ், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை இணைச் செயலாளராகப் பதவி வகித்துவரும் எம்.லஷ்மி, சி.எம்.டி.ஏ தலைமைச் செயல் அதிகாரியாக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை : ஆந்திர மாநில முதலமைச்சரும், நடிகருமான பவன் கல்யாண், தற்போது தான் திருப்பதி லட்டு விவகாரத்தில் ஏழுமலையானுக்கு களங்கம்…
ஷார்ஜா : ஐசிசியின் மகளீருக்கான டி20 உலகக்கோப்பையின் 9-வது தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. இதில்,…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் கடந்த ஆட்சி காலத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது 'வேட்டையன்' படத்தை முடித்து விட்டு, 'கூலி' படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படவேலைகள்…
சென்னை : இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தசரா திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசையில் அமைந்துள்ள…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. வரலாற்றில் இல்லாத அளவாக தங்கம் விலை உயர்ந்து…