முதியோர், ஆதரவற்றோர் உதவித்தொகையை உயர்த்த தமிழக அரசு முடிவு!

விதவை மற்றும் முதியோர் உதவித் தொகையை ரூ.1000ல் இருந்து ரூ.1,200-ஆக உயர்த்த முடிவு என தகவல்.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அரசின் அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறை சோதனைகளுக்கு பின் நடைபெறும் முதல் அமைச்சரவை கூட்டம். முதலமைச்சர் தலைமையில் நடைபெற்று வரும் அமைச்சரவை கூட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாகவும், அமலாக்கத்துறை நடவடிக்கை தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது கூறப்படுகிறது.
மேலும், விதவை மற்றும் முதியோர் உதவித் தொகையை 1000 ரூபாயில் இருந்து 1,200 ரூபாயாக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதியோர் மற்றும் ஆதரவற்ற கைம்பெண் மாத உதவி தொகையை ரூ.1,000-ல் இருந்து ரூ.1,200 ஆக உயர்த்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும், முதியோர், ஆதரவற்ற கைம்பெண் உதவித்தொகை உயர்த்தப்பட்டால் சுமார் 30 லட்சம் பேர் பயன்பெறுவர் எனவும் கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025