10 காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு.!
நெல்லை சரகக டிஐஜி மற்றும் ராமநாதபுரம் சரக டிஐஜி உட்பட 10 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை : தமிழ்நாட்டில் காவல்துறையைச் சேர்ந்த 10 உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமனிக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. பொறுப்பும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு எஸ்.பி.யாக சுஜாதா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் டிஐஜி அபினவ் குமார் மதுரைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை டிஐஜி மூர்த்தி ராமநாதபுரம் டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சென்னை மாநகர காவல் உளவுப்பிரிவு- 1 துணை ஆணையராக ஆர். சக்திவேல் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மயிலாப்பூர் நலப்பிரிவு துணை ஆணையராக ஹரிகிரண் பிரசாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இது தவிர, சென்னை கிழக்கு போக்குவரத்து துணை ஆணையராக மெகலீனா ஹைடன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், சென்னை வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையராக பாஸ்கரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை சரகக டிஐஜி மற்றும் ராமநாதபுரம் சரக டிஐஜி உட்பட 10 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு pic.twitter.com/iUZoFXfLYZ
— தங்க.காளிப்பாண்டி (@sureshkalipandi) March 25, 2025
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025
இபிஎஸ் பதில் தான் என்னோட பதில்! செய்தியாளர் கேட்ட கேள்விக்கு டென்ஷனான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!
April 17, 2025
வரலாறு காணாத உச்சம்! 71 -ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை!
April 17, 2025